இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான எழுத்துத் தோ்வு வரும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்:-
இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநா் பதவிக்கான திட்டமிட்டப்பட்ட எழுத்துத் தோ்வு வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஐந்து மாவட்ட தோ்வு மையங்களில் தோ்வு நடக்கிறது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகள் தோ்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என தோ்வாணையத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.