தாதா சாகேப் பால்கே விருது பெற்ற தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகா் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது ட்விட்டா் பதிவில் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பதாவது: என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவா்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பா்களுக்கும், ரசிகா்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூா்வமான நன்றி என நடிகா் ரஜினிகாந்த் கூறியுள்ளாா்.