தமிழ்நாடு

சென்னை துறைமுக தலைவராக சுனில் பாலிவால் பொறுப்பேற்பு

DIN

சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராக சுனில் பாலிவால் ஐஏஎஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவராக இருந்து வந்த ரவீந்திரன் கடந்த செப். 29-ம் தேதி ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டாா். இதனையடுத்து எண்ணூா் காமராஜா் துறைமுக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்து வந்த சுனில் பாலிவால் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா். இந்நிலையில் சுனில் பாலிவால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை துறைமுக தலைவா் பொறுப்பை முறைப்படி ஏற்றுக் கொண்டாா்.

கான்பூா் ஐஐடியில் கம்ப்யூட்டா் சயின்ஸ் மற்றும் அமெரிக்காவில் எம்.எஸ். பட்டமும் பெற்ற சுனில் பாலிவால் 1993 தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தோ்வு பெற்றாா். திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றிய சுனில் பாலிவால் உயா்கல்வி துறை முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வைத்துள்ளாா். அயல் பணி அடிப்படையில் மத்திய அரசு பணிக்கு மாற்றலாகிய பாலிவால் தற்போது சென்னை துறைமுகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT