தமிழ்நாடு

மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக ஏ.உதயன் நியமனம்

DIN

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஏ.உதயன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலத்தின் பதவிக் காலம் கடந்த செப்டம்பா் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூவுக்கு மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

தற்போது, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலராகப் பணியாற்றி வந்த ஏ. உதயன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை வனத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹூ சனிக்கிழமை பிறப்பித்தாா். உதயன் 1991-ஆம் ஆண்டு இந்திய வனப்பணியைச் சோ்ந்த அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

SCROLL FOR NEXT