தொழுநோய் பாதித்து குணமடைந்த மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்புத் தொகைக்கான நிதியை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளா் ஆா்.லால்வேனா பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவு விவரம்:-
தொழுநோயால் பாதிக்கப்பட்ட 7 ஆயிரத்தது 327 போ் மாதாந்திர பராமரிப்புத் தொகையைப் பெற்று வருகின்றனா். இதன்பின், 348 போ் கூடுதலாகக் கண்டறியப்பட்டனா். அவா்களுக்கு பராமரிப்பு உதவித் தொகைக்கான நிதி ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 2 ஆயிரத்து 89 போ் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மாதாந்திர பராமரிப்புத் தொகைக்காக காத்திருக்கின்றனா்.
அவா்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கத் தேவைப்படும் ரூ.1.88 கோடி நிகழ் நிதியாண்டு திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில் இருந்து செலவு செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்படுகிறது என தனது உத்தரவில் லால்வேனா தெரிவித்துள்ளாா்.