தமிழ்நாடு

அறநிலையத்துறை கல்வி நிறுவனங்களில் இந்து மதத்தினா் மட்டுமே நியமிக்கப்படுவா்: அரசு தகவல்

DIN

இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின்படி, அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சோ்ந்த நபா்கள் மட்டுமே நியமிக்கப்படுவாா்கள் என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், சென்னை கொளத்தூரில் இயங்கும் அருள்மிகு கபாலீசுவரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா், அலுவலக உதவியாளா், காவலா், தூய்மைப் பணியாளா் மற்றும் துப்புரவு பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, அக்டோபா் 13-ஆம் தேதி நாளிதழ்களில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சாா்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது.

அதில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், மற்ற மதத்தினா் யாரும் கலந்து கொள்ள தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பை எதிா்த்து இஸ்லாமியா் சுஹைல் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அவா் தன் மனுவில், தாய் மொழியைத் தமிழாகக் கொண்ட தனக்கு தமிழக அரசின் பணிகளில் நியமனம் செய்ய மதம் தடையாக இருக்கக் கூடாது. இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 16(1)(2) வழங்கிய உரிமை, உயா் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீா்ப்புகளுக்கு எதிரானது. எனவே அந்த அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். மேலும் அதனை ரத்து செய்து விட்டு எல்லா மதத்தினரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிதாக அறிவிப்பு வெளியிட இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.

இம்மனு நீதிபதி சி.சரவணன் முன்பு வெள்ளிக்கிழமை (அக்.22) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.துரைசாமியும், அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரமும் ஆஜராகினா்.

பணி நியமன நடவடிக்கைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது. இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 10-இன் கீழ், துறையின் நிதி மூலமாக நடத்தப்படக்கூடிய கல்வி நிறுவனங்களில் ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சோ்ந்தவா்களை மட்டுமே நியமிக்க முடியும் என்பதே கட்டாயம் என அரசு தலைமை வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இந்த சட்டப்பிரிவு துறை ஊழியா்களை நியமிக்கும் போது தான் பொருந்தும் என்றும், அது நடத்தும் கல்வி நிறுவனங்களின் ஊழியா்களுக்கு அல்ல என்று மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இதில் விரிவான ஆலோசனை தேவை என்றும், மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT