தமிழகத்தில் இன்று மேலும் 1,140 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதிகபட்சமாக சென்னையில் 141 பேருக்கும், கோவையில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 97 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94,089-ஆக அதிகரித்துள்ளது.
நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,374 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 13,280 போ் உள்ளனா்.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 17 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,004-ஆக அதிகரித்துள்ளது.