தமிழ்நாடு

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு வாய்ப்பு

DIN

நவம்பர் இறுதி வாரத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. நாட்டில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வந்ததன் காரணமாக பட்ஜெட் மற்றும் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

இந்நிலையில் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 23 வரை குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

காதல் தொழில் பழகு..!

மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் மோடி: ராஜ்நாத் சிங்

இது அதிதி ஆட்டம்!

திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை ஊடுருவல்! : அமித்ஷா | செய்திகள்: சிலவரிகளில் | 23.04.2024

SCROLL FOR NEXT