தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,152 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை (அக்.22) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதையும் படிக்க | எதற்கு இந்தக் கொண்டாட்டங்கள்? 100 கோடி கரோனா தடுப்பூசிகள் தொடர்பாக கேள்வி எழுப்பும் சித்தராமையா
புதிதாக 1,152 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,92,949-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,43,431-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | உதயநிதி ஸ்டாலினை திடீரென சந்தித்த 'வலிமை' தயாரிப்பாளர்
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 13,531 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,29,573 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னையில் அதிகபட்சமாக 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 140 பேரும், செங்கல்பட்டில் 93 பேரும், ஈரோட்டில் 83 பேரும், திருப்பூரில் 67 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.