தமிழகத்தில் இன்று மேலும் 1,164 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,164 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 152 பேருக்கும், கோவையில் 137 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 91,797-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நோய்த் தொற்றிலிருந்து இன்று 1,412 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
இதையும் படிக்க- சென்னை விமான நிலையத்தில் ரூ.2.19 கோடி தங்கம் பறிமுதல்
இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 26.42 லட்சத்தைக் கடந்துள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 13,790 போ் உள்ளனா்.
மற்றொருபுறம், தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 20 போ் பலியானதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,968-ஆக அதிகரித்துள்ளது.