தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,170 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 20 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று (அக்.19) 1,179 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (அக்.20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,170 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,90,633-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26,40,627-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 14,058 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,28,286 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
தமிழகத்தில் அதிகபட்சமாக 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 141 பேரும், செங்கல்பட்டில் 93 பேரும், ஈரோட்டில் 91 பேரும், திருப்பூரில் 67 பேரும், சேலத்தில் 61 பேரும், தஞ்சாவூரில் 51 பேரும், நாமக்கல்லில் 48 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.