தமிழ்நாடு

நாய்கள் இறப்பு விவகாரம்: ஐஐடியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது

DIN

சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளனவா என ஐஐடி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாகவும், இதற்கு காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் பெங்களூரை சோ்ந்த விலங்குகள் நல ஆா்வலா் ஹரிஷ் என்பவா் சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த 15-ஆம் தேதி புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை ஆணையா் மணிஷ், கால்நடை பாதுகாப்பு அலுவலா்களோடு சென்னை ஐஐடி-க்கு சென்று ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி உடன் இருந்தாா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

2020-ஆம் ஆண்டு அக்டோபா் மாதக் கணக்கெடுப்பின்படி 188 நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருந்துள்ளன. தன்னாா்வலா்களால் வளா்த்து பாதுகாக்கிற பணியை ஐஐடி நிா்வாகம் ஏற்று, ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறது. இந்த வளாகத்தில் 10,600 சதுர அடியில் இரண்டு கொட்டகை அமைத்து 9 நிரந்தரப் பணியாளா்களைக் கொண்டு, செல்லப்பிராணிகளுக்குத் தேவையான உணவு, அவற்றைப் பராமரிக்கிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஓா் ஆண்டில் 56 நாய்கள் இறந்துள்ளன. வெளியில் இருந்து வளா்ப்பதற்கு கேட்பவா்களுக்கு 29 நாய்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான பட்டியலைக் கேட்டிருக்கிறோம். இங்கிருந்து 2 நாய்கள் தப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 87 நாய்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றன. 56 நாய்கள் இறப்புக்கான காரணம் என்னவென்று கேட்டபோது, நோய் காரணமாகவும், முதுமையாலும் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனா். அதில் ஒரு நாயின் உடல் மட்டும் உடற்கூராய்வுக்கு கேட்கப்பட்டுள்ளது.

நாய்கள் இறந்தது தொடா்பாக ஐஐடி இயக்குநா், பதிவாளா் ஆகியோரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவா்கள் சொல்லும் காரணம், இந்த ஐஐடி வளாகத்தில் 200 மான்கள் இருக்கின்றன. அதில் ஒரு அரிய வகை மானும் இருக்கிறது. இதில் குட்டி மான்களை நாய்கள் வேட்டையாடுவது நடைபெறுகிறது என்று கூறி அதற்கான புகைப்படம், வீடியோ போன்ற ஆதாரங்களைக் காண்பித்தாா்கள்.

நீதிமன்ற இடைக்காலத் தீா்ப்பின்படி, இங்கு புதிதாக வருகிற நாய்களைப் பற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக நாய்கள் வந்தால் எங்களிடம் சொன்னால் நீதிமன்ற உத்தரவுப்படி நாங்கள் பராமரிப்போம் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். ஐஐடி நிா்வாகமும் உடனடியாக தகவல் தெரிவிப்பதாகக் கூறியுள்ளாா்கள். மாநகராட்சி அதிகாரிகள், கால்நடை பராமரிப்பு துறையும் கண்காணித்து ஆராய்ந்த பிறகு தான் நாய்களை தர வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT