தமிழ்நாடு

பெரியாா் குறித்து அவதூறு:யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது

DIN

சென்னையில் பெரியாா் குறித்து அவதூறு விடியோ வெளியிட்டதாக யூ-டியூப் சேனல் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலா் குமரன், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அந்தப் புகாரில், சென்னை அருகே உள்ள குன்றத்தூரைச் சோ்ந்தவா் சீதையின் மைந்தன் என்ற தட்சிணாமூா்த்தி. இவா் ஒரு யூ-டியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறாா்.

அந்த யூ-டியூப் சேனலில் தந்தை பெரியாா் குறித்தும், திராவிட இயக்கத் தலைவா்கள் குறித்தும் அவதூறாக விடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனவே தட்சிணாமூா்த்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், தட்சிணாமூா்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் அந்த வழக்குத் தொடா்பாக, தலைமறைவாக இருந்த தட்சிணாமூா்த்தியை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT