தமிழ்நாடு

கோயம்பேடு வழியாக பயணிப்போருக்கு அமைச்சர் சொன்ன நல்ல செய்தி

DIN


சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இம்மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், சென்னையில் தமிழக அரசால் பாலம் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் கோயம்பேட்டில் உயர்மட்ட சாலை மேம்பாலத்தை திறக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இந்த பணி ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் 29.09.2015ல் துவக்கப்பட்டது. இப்பணியினை 28.06.2018க்குள் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உயர்மட்ட மேம்பாலப்பணியுடன் சேவை சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியும் முழுமையாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டும். ஆனால் உங்கள் ஆட்சியில் எதுவும் 2018 வரை நடைபெறவில்லை.

ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின் அந்த துறையின் அமைச்சர் என்ற முறையில் நேரடியாக இரு முறை 18.07.2021, 18.09.2021ல் பார்வையிட்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள், ஒப்பந்ததாரருக்கு ஆலோசனை வழங்கினேன்.

நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த மேல்முறையீட்டு (மனு எண். 123/2021) மனுவை அரசின் சார்பாக முயற்சி செய்து சாதகமான தீர்ப்பினை 29.09.2021ல் தான் திமுக அரசு பெற்றது. அதில் கட்டப்பட்டிருந்த கட்டடத்தையும், ஆக்கிரமிப்புகளையும் சில தினங்களுக்கு முன் தான் அகற்றினோம். இப்பணிகள் எதனையும் செய்யாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது உங்கள் அரசு தான். இறுதி கட்ட பணிகளை திமுக அரசு 31.10.2021க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கோயம்பேடு மேம்பாலம் கொண்டுவரப்படும்.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

வேளச்சேரி புறவழிச்சாலையில் 29.06.2012 அன்று ரூ.108 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிக்கான உத்தரவு வழங்கப்பட்டது. மூன்று ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் 23.12.2015ல் ஒப்பந்தகாரர் பணியினை துவக்கினார். இந்த பணி ஒப்பந்தப்படி 22.09.2018ல் முடித்திருக்க வேண்டும். பணியினை முடிக்க வேண்டிய காலம் முடிந்த பின்னர் 23 மாதங்கள் கும்பகர்ணனை போல உறக்க நிலையில் இருந்தது உங்களுடைய ஆட்சி தான். திமுக அரசு பொறுப்பேற்ற பின் பொதுப்பணித்துறை அமைச்சர் என்கின்ற முறையில் அப்பணிகளை 18.07.2021ல் நானே நேரடியாக களத்தில் ஆய்வு செய்தேன். வேளச்சேரி மேம்பாலப்பணியின் இரண்டாம் அடுக்கினை 31.10.2021க்குள்ளும் முதல் அடுக்கினை 31.12.2021க்குள்ளும் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரருக்கும் அறிவுரை வழங்கினேன். இரண்டாம் அடுக்கு இம்மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். 

மேடவாக்கம் மேம்பாலப்பணி மதிப்பீடு ரூ.133.10 கோடியில் 14.08.2015ல் வழங்கப்பட்டது. இப்பணிக்கான உத்திரவு 08.01.2016ல் சன்ஷைன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஒப்பந்தக்காரர் பணியினை செயல்படுத்துவதில் மெத்தனமாக இருந்ததால் ஒப்பந்தம் 14.08.2018ல் ரத்து செய்யப்பட்டது. மறுபடியும் ஒப்பந்தம் கோரி ரெனாட்டஸ் நிறுவனத்திற்கு 12.12.2018ல் பணி உத்திரவு வழங்கப்பட்டது.

இந்நிறுவனம் 12.09.2020க்குள் பணியினை முடித்திருக்க வேண்டும். ஆனால், இப்பணி முடிக்கப்படவில்லை. இதற்கு பின்னர் 8 மாத காலம் ஆட்சியில் இருந்தது நீங்கள் தான்?. மேற்கண்ட மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணிகளை 18.07.2021 அன்று நானே நேரடியாக பார்வையிட்டேன். மேடவாக்கம் சாலை மேம்பாலப் பணியினை 31.12.2021க்குள் முடிக்கும்படி அதிகாரிகளுக்கும், ஒப்பந்தக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளேன். ஒப்பந்த காலத்திற்குள் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி அரசு தான். 

இன்று போக்குவரத்து நெரிசலை குறைத்ததிட சாலை மேம்பாலப்பணிகள் கால தாமதமாக நடைபெறுவதாக நீலிக்கண்ணீர் வடிப்பது ஏன் ? என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

SCROLL FOR NEXT