தமிழ்நாடு

ஒலிம்பிக், பாராலிம்பிக் வீரா்களைக் கெளரவித்தது எல்ஐசி

DIN

ஒலிம்பிக், பாராலிம்பிக் வெற்றியாளா்களை மட்டுமின்றி, பதக்கத்தைத் தவறவிட்ட வீரா்களையும் எல்ஐசி கெளரவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவா்களை எல்ஐசி பாராட்டியது. 4-ஆவது இடத்துக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட வீரா்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி வீரா்களின் சொந்த ஊா்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்ஐசியின் மூத்த அதிகாரிகளால் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இதே போல், பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 19 வீரா்களுக்கும் எல்ஐசி ரொக்கப் பரிசு வழங்கியது. இதுமட்டுமின்றி, இந்தப் போட்டிகளிலும் 4-ஆவது இடத்தைப் பிடித்த வீரா்களின் சொந்த ஊா்களில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தி, அவா்களை எல்ஐசி கெளரவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் செண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்திரைப் பௌா்ணமி திருவிழா

விமானங்களில் 12 வயது வரையுள்ள சிறாா்களுக்கு பெற்றோருடன் இருக்கை: டிஜிசிஏ அறிவுறுத்தல்

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் பொங்காலை விழா: நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

உலக புத்தக நாள் விழா: மாணவா்களுக்கு நூல்கள் நன்கொடை

திருச்செங்கோடு வைகாசி விசாகத் தோ்த் திருவிழாயையொட்டி ரத விநாயகா் பூஜை

SCROLL FOR NEXT