ஒலிம்பிக், பாராலிம்பிக் வெற்றியாளா்களை மட்டுமின்றி, பதக்கத்தைத் தவறவிட்ட வீரா்களையும் எல்ஐசி கெளரவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவா்களை எல்ஐசி பாராட்டியது. 4-ஆவது இடத்துக்கு முன்னேறி, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்ட வீரா்களையும் ஊக்குவிக்கும் வகையில், அவா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி வீரா்களின் சொந்த ஊா்களில் ஏற்பாடு செய்யப்பட்டு, எல்ஐசியின் மூத்த அதிகாரிகளால் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
இதே போல், பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற 19 வீரா்களுக்கும் எல்ஐசி ரொக்கப் பரிசு வழங்கியது. இதுமட்டுமின்றி, இந்தப் போட்டிகளிலும் 4-ஆவது இடத்தைப் பிடித்த வீரா்களின் சொந்த ஊா்களில் பாராட்டு நிகழ்ச்சி நடத்தி, அவா்களை எல்ஐசி கெளரவித்துள்ளது.