தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் ,கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை திமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினர்.
கெங்கவல்லி பேரூராட்சியில் பேரூர் திமுக சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவிற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ஏ.கே. அகிலன் முன்னிலையில் கெங்கவல்லி நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன், 300 பேருக்கு அன்னதானம் வழங்கியதுடன், சாலையோரத்திலிருந்த 52 பேருக்கு போர்வைகளையும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரகாஷ், மற்றும் ராமசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கெங்கவல்லியில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றோர்.
தம்மம்பட்டி பேரூராட்சியில் நடந்த உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா தம்மம்பட்டி பேருந்து நிலையம், தேவேந்திர தெரு உள்ளிட்ட இடங்களில் நகர திமுக செயலாளர் வி.பி.ஆர். இராஜா, ஏழைகள் 100 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி, 400 பேருக்கு மேல் இனிப்புடன் அன்னதானம் வழங்கினார்.
இதையும் படிக்க | புதுச்சேரியில் திடீர் வெடி விபத்து: வீட்டிலிருந்து 8 பேர் காயம்
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜசேகரன், ஏடி சி.கணேசன், அஸ்ரப், சதீஷ்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் ரெனால்டு, பஸ் மேனேஜர் ரமேஷ், வினோத், ராஜா, பழனி ராஜன், டெல்லி ராஜகோபால், சையது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.