தருமபுரி: தருமபுரி அருகே அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயில் அமைந்துள்ளது.
இத் திருக்கோயிலில், காலபைரவர் ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 6 மணிக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகம், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாநிலத்திலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் பைரவரை வழிபட்டனர்.
இதையும் படிக்கலாமே.. திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
இதேபோல, கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். கரோனா பரவலை தடுப்பு விதிமுறைகளையொட்டி கோயில் பிராகரத்தை வலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதையும் படிக்கலாமே.. தக்காளி வாங்கும்போது கண்ணீர் வந்ததா? காரணம் இவர்களில்லை
இதைத் தொடர்ந்து மாலையில் காலபரைவர் திருவீதி உலா நடைபெற்றது.