தமிழ்நாடு

ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மச்சாவு

DIN


ஆலங்குளம்: ஆலங்குளத்தில் ஜவுளி வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்தார். 

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முருகன்(36). பைக்கில் சென்று ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார். அவர் வியாழக்கிழமை இரவு வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை அவர் ஆலங்குளம் மெயின் ரோடு ஊர் மடை அருகில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. 

தகவலறிந்து வந்த ஆலங்குளம் போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் மர்மமான முறையில் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

ரிஷப் பந்த் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கருத்து!

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

SCROLL FOR NEXT