தமிழ்நாடு

கம்பத்தில் அமைச்சர் துரைமுருகன் காரை மறித்து விவசாயிகள் மனு

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையை பார்வையிட வந்த நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் காரை மறித்த 5 மாவட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை தேனி மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வெள்ளிக்கிழமை மனு கொடுத்தனர்.

முல்லைப் பெரியாறு அணையை தமிழக நீர்வள ஆதார துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை பார்வையிட கம்பம் வழியாக வந்தார்.

கம்பம் கூடலூர் நெடுஞ்சாலையில் தனியார் விடுதி முன்பாக 5 மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஆர். தேவர் தலைமையில் 50க்கும் மேலான விவசாயிகள் கூடியிருந்தனர்.

அமைச்சரை முற்றுகையிடப் போவதாக தகவல் கிடைத்ததும் உத்தமபாளையம் காவல் கோட்ட   உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா விவசாயிகளிடம்  கலைந்து செல்லுங்கள், மறியல் செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதற்கு விவசாயிகள் அமைச்சரை சந்தித்து மனு கொடுக்க போவதாக தெரிவித்தனர். இதனால் அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அமைச்சர் வந்த காரை விவசாயிகள் சங்கத் தலைவர் தலைமையில் மறித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
மனுவில்,  பெரியாறு அணைக்கு வரும் நீர் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும், பெரியாறு அணையில் தமிழக காவல்துறை பாதுகாப்பில் ஈடுபட  வேண்டும், அணை நிர்வாகம் தேனி மாவட்ட ஆட்சியரின் பொறுப்பில் வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அணைக்குச் செல்லும் தமிழக அதிகாரிகளை கெடுபிடி செய்யாமல் வல்லக்கடவு வழியாக அனுப்ப வேண்டும்,

அணை பற்றி வலைதளங்களில் தவறாக பதிவு செய்பவர்கள் மீது கேரள முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார், அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.

விவசாயிகள் கொடுத்த மனுவை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டு பரிசீலனை செய்வதாக கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT