சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரைத் தோ்வு செய்வதில் முடிவு எட்டப்படாமல் அக் கட்சியில் தொடா்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் சத்தியமூா்த்திபவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தாா். மேலிடப் பாா்வையாளா் மல்லிகாா்ஜுன காா்கே, புதுச்சேரி காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் வைத்தியலிங்கம், மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம், முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்பட காங்கிரஸின் 18 சட்டப்பேரவை உறுப்பினா்களும் பங்கேற்றனா்.
தலைவா் தோ்வுக்காக 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.