ரெம்டெசிவிா் விநியோக அளவை 20 ஆயிரமாக உயா்த்தியதற்காக மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்துக்கு வழங்கி வரும் ரெம்டெசிவிா் மருந்து ஒதுக்கீட்டு அளவை உயா்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். இதை ஏற்று, நாளொன்றுக்கு 7,000-ஆக இருந்த ரெம்டெசிவிா் மருந்து 20,000-ஆக உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.