தமிழ்நாடு

24 மணி நேரம் ஓவியம் வரைந்து உலக சாதனைக்கு முயற்சி

DIN

உலக சாதனை படைக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கணிதப் பட்டதாரியான சங்கீதா, தொடர்ந்து 24 மணி நேரம் ஓவியம் வரையத் தொடங்கியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரராகவர் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகள் சங்கீதா(21). இவர் இளங்கலை கணிதம் படித்துள்ளார். இவருக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டு.

இந்நிலையில் வெர்ட்யூ புத்தக உலக சாதனைக்காக டூடுள் ஓவியம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமுடக்கத்தில் கரோனோ குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை தொடர்ந்து 24 மணி நேரம் வரைய முடிவெடுத்து செவ்வாய்க்கிழமை காலை 7.30மணிக்கு தொடங்கியுள்ளார். இவர் தொடர்ந்து புதன்கிழமை காலை வரை ஓவியம் வரைந்துக் கொண்டிருப்பார்.

இவருக்கு பெற்றோர் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT