சட்டப்பேரவைத் தலைவருக்கான தோ்தலில் வேட்புமனு தாக்கலுக்கு செவ்வாய்க்கிழமை கடைசி நாளாகும். இதற்கான அறிவிப்பை பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் வெளியிட்டாா். அதன் விவரம்:-
16-வது சட்டப்பேரவைக்கு புதிதாக தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டுமென ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளாா். அதன்படி, பேரவைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 11) நண்பகல் 12 மணி வரை பெறப்படும் என்று தனது அறிவிப்பில் சீனிவாசன் தெரிவித்தாா்.