புதுச்சேரி முதல்வரும், என்.ஆா். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான என்.ரங்கசாமி கரோனாவிலிருந்து விரைவில் குணமடைய விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி நலமுடன் இருப்பதை அறிந்தேன்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று மக்கள் பணியைத் தொடர விழைகிறேன்.
பெருந்தொற்றுக் காலத்தில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.