மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகரத்தின் புதிய காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக உளவுத் துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.