தமிழ்நாடு

நாராயணத்தேவன்பட்டியில் இரட்டைக் கஷாயம் விநியோகம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டியில் இரட்டைக்கஷாயங்களான நிலவேம்பு கஷாயம் மற்றும் கபசுரக் கஷாயம் என இரண்டும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி பகுதிகளில் கரோனா தொற்று  பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் முகாம் அமைக்கப்பட்டு இரட்டை கசாயங்களான நிலவேம்பு, கபசுர கசாயங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியன் வார்டு உறுப்பினர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இரண்டு கஷாயங்களையும் வழங்கினர்.

மேலும் முகக்கவசம், சனிடைசர் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

SCROLL FOR NEXT