கம்பம்: தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டியில் இரட்டைக்கஷாயங்களான நிலவேம்பு கஷாயம் மற்றும் கபசுரக் கஷாயம் என இரண்டும் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தேனி மாவட்டம், நாராயணத்தேவன் பட்டி ஊராட்சி பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை முன்னிட்டு காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு சார்பில் முகாம் அமைக்கப்பட்டு இரட்டை கசாயங்களான நிலவேம்பு, கபசுர கசாயங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுத்தாய் செல்லையா, ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டியன் வார்டு உறுப்பினர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இரண்டு கஷாயங்களையும் வழங்கினர்.
மேலும் முகக்கவசம், சனிடைசர் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை வழங்கினார்.