தமிழ்நாடு

69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அதிமுக

DIN

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க உடனடியாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்கும், சமூக நீதி பாதுகாப்பிற்கும் அடிப்படையாக 69 சதவிகித இடஒதுக்கீடு உள்ளது.

மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்திற்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இந்த தீர்ப்பின் எதிரொலியாக 69% இடஒதுக்கீடு என்ன ஆகுமோ என்ற அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT