திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நிறைவடைந்தது.
திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகம், இரு பொறியியல் கல்லூரிகள், இரு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகள், ஒரு பட்டயக் கல்லூரி, பள்ளி என மொத்தம் 20 இடங்களில் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை சோதனை செய்தனா்.
நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த வருமானவரி சோதனை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. சென்னை ஆழ்வார்வேட்டையில் உள்ள எ.வ.வேலு வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.