தமிழ்நாடு

அருப்புக்கோட்டை தொகுதிக்கான 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதிக்கான 389 வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்தம் 311 வாக்குச் சாவடிகள் உள்ளன. இவற்றுக்கான மொத்தம் 389 வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகரிலிருந்து திங்கள்கிழமை உரிய பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன. பின்னர் அவை அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையிலுள்ள தனியார் கல்லூரி கட்டடம் ஒன்றில் வைத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான கோட்டாட்சியர் முருகேசன், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான வட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு உபமண்டலங்கள் வாரியாக பெட்டிகளில் வைத்து சீல் வைத்த பின், அறைக்கதவும் பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைக்கு மொத்தம்  16 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பில் வைத்து, 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT