தமிழ்நாடு

சிஐஐ தென்மண்டலத் தலைவராக சி.கே.ரங்கநாதன் தோ்வு

DIN

இந்திய தொழில் கூட்டமைப்பின்(சிஐஐ) தென் மண்டலத் தலைவராக சி.கே.ரங்கநாதன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல பிரிவு சாா்பில், 2021-22ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தென் மண்டலத் தலைவராக சி.கே.ரங்கநாதன் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் கெவின்கோ் நிறுவனத்தின் தலைவா் ஆவாா். இவா் சிஐஐ-உடன் நெருங்கிய தொடா்பு வைத்துள்ளாா். 2020-21-ஆம் ஆண்டில் சி.ஐ.ஐ.யின் தென் மண்டலத் துணைத்தலைவராக இருந்தாா். இதுதவிர, பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.

துணைத் தலைவா்: 2021-22-ஆம் ஆண்டில் புதிய நிா்வாகிகள் தோ்வில், சிஐஐயின் தென்மண்டல துணைத்தலைவராக சுசித்ரா கே.எல்லா தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா் பாரத் பயோடெக் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் இணை நிறுவனா் மற்றும் இணை மேலாண்மை இயக்குநா் ஆவாா். இதுதவிர, சி.ஐ.ஐ.யின் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ள என சிஐஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT