தமிழகம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குச் செல்வதற்கான தொலைநோக்குத் திட்டங்களை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் விடியலுக்கான முழக்கம் பொதுக் கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு திமுக நடத்தும் முதல் பொதுக்கூட்டம் இந்தப் பொதுக்கூட்டம். விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின் மே 2-இல் தமிழகத்தில் விடியல் பிறக்கும் என்றார். இதைத் தொடர்ந்து, ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள் என்பதன் அடிப்படையில் தொலைநோக்குத் திட்டத்தை மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
ஸ்டாலினின் 7 உறுதி மொழிகள்
இந்த 7 துறைகளின் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் ஸ்டாலின்.