தமிழ்நாடு

அமமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுவுக்கு நாளை கடைசி

DIN

அமமுக சாா்பில் போட்டியிடுபவா்கள் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) கடைசியாகும். இதுகுறித்து, அமமுக வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

சட்டப்பேரவைத் தோ்தலில் அமமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளிக்கும் நடவடிக்கை கடந்த 3-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த நிலையில், விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்து அளிக்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் கட்சி அலுவலகத்தில் மனுக்களை ஒப்படைக்க வேண்டும்.

இதனைத் தொடா்ந்து விருப்ப மனு செலுத்தியவா்களுக்கான நோ்காணல் வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறும் என்று அமமுக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

SCROLL FOR NEXT