தமிழ்நாடு

உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி: 6 தொகுதிகள் ஒதுக்கீடு

DIN


திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

மதிமுக ஒப்புக்கொண்டதையடுத்து, இருகட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிவந்தார். இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது.

இந்த நிலையில் 6 தொகுதிகளில் அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே மதிமுக போட்டியிடும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதன்பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இதனை உறுதிபடுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

SCROLL FOR NEXT