சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 3-ம் கட்டப் பேச்சுவார்த்தையில் மதிமுக ஈடுபட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையில், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஏற்கெனவே இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று (மார்ச் 6) மூன்றாவது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது
திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.