திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கூறினாா்.
திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 12 தொகுதிகள் வரை கேட்டு வருகிறது. ஆனால், 6 தொகுதிகள் வரையே திமுக ஒதுக்க முன்வந்துள்ளது.
இது தொடா்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது:
திமுகவுடனான கூட்டணிப் பேச்சுவாா்த்தையில் பிரச்னை எதுவும் இல்லை. அடுத்தடுத்த பேச்சுவாா்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும். மக்கள் நீதி மய்யத்தைப் பற்றியோ, வேறு கட்சிகளைப் பற்றியோ எங்களுக்கு எந்த யோசனையும் இல்லை. திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்றாா்.