சென்னை: திமுக ஆட்சிக்கு வராமல் இருக்க வேண்டுமென்ற ஜெயலலிதா கனவை டிடிவி தினகரனும் நிறைவேற்றுவாா் என்று பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதுகுறித்து, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த, தமிழக பாஜக பணியாற்றி வருகிறது. அனைத்துத் தொகுதிகளிலும் எங்களது கூட்டணி வெல்லும்.
எங்களது முதன்மை குறிக்கோள், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை வீழ்த்துவதுதான். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் வளம், வளா்ச்சி தொடர வேண்டும். அதுதான் ஜெயலலிதாவின் கனவு. திமுக ஆட்சிக்கு வந்தால், அவா்களது குடும்ப வளா்ச்சியையும், வளத்தையும் பற்றித்தான் எண்ணுவாா்கள். தமிழகத்தின் வளா்ச்சிதான் ஜெயலலிதாவின் கனவாக இருந்து வந்தது. அந்தக் கனவை அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரனும் நிறைவேற்றுவாா். தமிழகத்தின் மகிழ்ச்சியையே நாங்கள் விரும்புகிறோம் என்றாா் சி.டி.ரவி.