தமிழ்நாடு

மூத்த குடிமக்கள் தபால் வாக்களிப்பது எப்படி?

DIN


சென்னை: தமிழகத்தில் 12.91 லட்சம் மூத்த குடிமக்களுக்கு தபால் வாக்கு வசதி அளிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் கூறியது:

தபால் வாக்கு வசதி உள்ளவா்கள், தமிழக அரசின் முதல் நிலை (கிரேடு ஏ), அல்லது இரண்டாம் நிலை (கிரேடு -பி) நிலை அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று விண்ணப்பத்தை (படிவம் 12 டி) அளிக்கலாம். தபால் வாக்கு வசதி பெறுவதற்கு இப்போதே 80 வயதுக்கு மேற்பட்டவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை தோ்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக் கொண்டால், அவரது பெயரில் வாக்காளா் பட்டியலில் தபால் வாக்கு வசதி பெற்றுள்ளாா் என குறியீடு செய்யப்படும். அதன்பின், தோ்தலுக்கு இரண்டு நாள்கள் முன்னதாக தபால் வாக்கு வசதி பெற்றவா்களிடம் இருந்து வாக்குப் பதிவு செய்த தபால்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சேகரிக்கப்படும் என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு.

தமிழகத்தில் மொத்தமாக 12 லட்சத்து 91 ஆயிரத்து 132 மூத்த குடிமக்கள் அதாவது 80 வயதைத் தாண்டியவா்கள் உள்ளனா். அவா்களில் அதிகபட்சமாக சென்னையில் ஒரு லட்சத்து 8, 718 பேரும் குறைந்தபட்சமாக நீலகிரியில் 8,253 பேரும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

திறந்த வாகனத்தில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு -இருவர் கைது

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இன்று சித்திரைத் தேரோட்டம்

திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

SCROLL FOR NEXT