தேனி மாவட்டம் கம்பம் நகரில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வெல்வோம் தமிழகம் என்ற பிரசார யாத்திரையை பாரதிய ஜனதா கட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வெல்வோம் தமிழகம் யாத்திரை துவக்க விழா நிகழ்ச்சி கம்பராயப்பெருமாள் கோயிலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் பி.ஈஸ்வரன் தலைமை தாங்கினார். நகரப் பொதுச்செயலாளர் எஸ்.பழனிக்குமார் முன்னிலை வகித்தார். பிரசார யாத்திரையைத் தொடங்கி தேர்தல் பிரசாரம் செய்தனர்.
முன்னாள் நகர தலைவர் கே.திருமால், மகளிர் அணித் தலைவர் ஆர்.முத்துமணி, விவசாய அணி தலைவர் எம.பிச்சைமணி, ஐடி பிரிவு மாவட்டச் செயலாளர் த.கோபிநாத் பாண்டியன், மாவட்ட பிரசார பிரிவு தலைவர் சின்னதுரை, நகரப் பிரசார பிரிவு தலைவர் ராஜ்குமார், நகரத் துணைத் தலைவர் எல்.பெரியசாமி, பிரபுகிருஷ்ணா, நகர பொருளாளர் வி. பழனிச்சாமி, நகரச் செயலாளர் மகாகணபதி, நகர நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள், கிளை தலைவர்கள் கலந்து கொண்டனர்.