தமிழ்நாடு

திமுகவுடன் மீண்டும் பேச்சு தொடரும்: ஈஸ்வரன்

DIN

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுகவுடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆலோசனையில் ஈடுபட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு ஈஸ்வரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. திமுகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு எத்தனை தொகுதிகள் தேவை என்பதை எடுத்துக் கூறியுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT