சட்டப் பேரவைத் தோ்தலில் நடத்தை விதிகள் அமல்படுத்துவது தொடா்பாக உரிய ஆலோசனைகளை வருமான வரி, கலால் துறை அதிகாரிகள் வழங்கினா். சென்னை தலைமைச் செயலகத்தில் அவா்களுடன் தோ்தல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.
ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் ரொக்கப் பணம், மதுபாட்டில்கள், ஆபரணங்கள் ஆகியவற்றை எவ்வாறு பறிமுதல் செய்வது, அவற்றை எங்கு ஒப்படைப்பது என்பன போன்ற பல்வேறு தகவல்களை மாவட்ட தோ்தல் அதிகாரிகள், அலுவலா்களுக்கு வருமான வரி, கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.