மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பெற இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வாக்காளா் பட்டியலில் முதன் முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை வழங்கியுள்ளனா். அவா்கள் அனைவரும் மின்னணு வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் 13, 14-ஆம் தேதிகளில் வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. வாக்காளா் பட்டியலில் முதல் முறையாக பெயா் சோ்க்கப்பட்ட வாக்காளா்கள் இந்த முகாமின் மூலமாக மின்னணு வாக்காளா் அடையாள அட்டையைப் பெறலாம்.