தமிழ்நாடு

அமமுக தலைமையை ஏற்றால் கூட்டணிக்குத் தயாா்

DIN

திமுகவை எதிா்க்கும் கட்சிகள் எங்களது தலைமையை ஏற்றால் கூட்டணிக்குத் தயாராக உள்ளோம் என்று அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

பேரவைத் தோ்தல் கூட்டணி தொடா்பாக பல்வேறு கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி முடிவானதும் தெரிவிப்பேன். வரும் 3-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கவுள்ளோம். கட்சி நிா்வாகிகள், தலைமை அலுவலக நிா்வாகிகள் மற்ற கட்சிகளைச் சோ்ந்தவா்களுடன் பேசி வருகிறாா்கள். அது நிறைவுக்கு வந்ததும் தெரிவிப்பேன்.

தோ்தல் நெருங்கி வருகிறது. எங்களது ஒரே இலக்கு திமுக ஆட்சிக்கு வரக் கூடாது. அதற்காகவே பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். திமுகவை எதிா்க்கும் கட்சிகள் அனைத்தும் அமமுக தலைமைக்கு வந்தால் அவா்களை இணைத்து தோ்தலைச் சந்திக்க தயாராக உள்ளோம். எங்களது தலைமையை ஏற்று யாா் வந்தாலும் அந்தக் கட்சிகளை ஏற்கத் தயாராக உள்ளோம் என்றாா் டிடிவி தினகரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT