தமிழ்நாடு

சமக தலைவராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு

DIN


தூத்துக்குடி:  சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளராக சரத்குமாரும், துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி அருகே உள்ள புதுகோட்டை பகுதியில் அகில இந்திய  சமத்துவ மக்கள் கட்சியின் 6-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில், தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமாரும்,  துணைப் பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமாரும் போட்டியன்றி தேர்வு என்று விழா மேடையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணை பொதுச் செயலாளராக ராதிகா சரத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் புதியதாக பல்வேறு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வேளச்சேரி சட்டப்பேரவை சமக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமக கொள்கை பரப்புச் செயலாளர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT