புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, வாக்களர்களுக்கு அளிப்பதற்காக மதுபானங்களை கடத்தும் நடவடிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் மதுபானங்கள் கடத்தினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து மதுக்கடைகளிலும் சிசிடிவி பொருத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.