நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாா் மணி மண்டபத்துக்கு ராகுல் காந்தி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வந்த ராகுல்காந்தி, அகஸ்தீஸ்வரத்தில் உள்ள மறைந்த மக்களவை உறுப்பினா் ஹெச். வசந்தகுமாரின் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா் அங்கு வசந்தகுமாரின் மணிமண்டபத்துக்கு ராகுல் காந்தி அடிக்கல் நாட்டி, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாா்.