தமிழகத்தில் புதிதாக 474 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதில் ஆந்திரத்திலிருந்து வந்தவர்கள் 3 பேர், பிகாரிலிருந்து ஒருவர் வந்துள்ளார்.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 171 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,52,016 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 482 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,35,506 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,501 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் தமிழகத்தில் இன்னும் 4,009 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.