தமிழகத்தில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
அதன்பிறகு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கடற்கரைகளிலும் காலை 5 மணிமுதல் 9 மணிவரை நடைப்பயிற்சி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.