தமிழகத்தில் புதிதாக 6,596 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 6,596 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,43,415 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 10,432 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 166 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 23,58,785 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 31,746 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 52,884 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அதிக பாதிப்புகள் பதிவான மாவட்டங்கள்: