நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஜூன் 28-ம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் ஜூன் 23ஆம் தேதிக்குள் மின்னஞ்சலில் புகார் அளிக்கலாம் என அறிவித்திருந்தனர்.
இந்த காலவசகாசம் இன்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துகள் நீட் தேர்விற்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்துள்ளன.
இந்நிலையில், பதிவு செய்யப்பட்ட கருத்துகளை இறுதி செய்வது குறித்து ஜூன் 28ஆம் தேதி நீதிபதி ஏ.கே.ராஜனின் குழு ஆலோசனை செய்யவுள்ளனர்.