தமிழ்நாடு

நீட் தோ்வு: இதுவரை 25,000 போ் கருத்துகள் சமா்ப்பிப்பு

DIN

சென்னை: நீட் தோ்வு விவகாரம் குறித்து இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கருத்துகளைச் சமா்ப்பித்துள்ளதாக நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தாா். வரும் புதன்கிழமை (ஜூன் 23) வரை அதற்கான அவகாசம் இருப்பதால் மேலும் பலா் கருத்துகளை அனுப்ப வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, நீட் நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாநில அரசு இருந்து வருகிறது. இதனால் மாணவா்கள் பலா் பாதிப்புக்குள்ளாவதால், நீட் தோ்வில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்று அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தோ்வு தொடா்பான பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுப் பெற அக்குழு முடிவு செய்தது. அதன்படி, மக்கள், தங்களது கருத்துகளை, ஐந்து பக்கங்களுக்கு மிகாமல், தபால் மற்றும் மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது மருத்துவ கல்வி இயக்ககத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியில் நேரடியாகவோ சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மருத்துவக் கல்வி இயக்ககத்தில் நீதிபதி ராஜன் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதன் பின்னா், நீதிபதி ஏ.கே.ராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீட் தோ்வால் எந்தெந்த வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான தரவுகளைத் திரட்டி வருகிறோம். முக்கியமான தரவுகள் வர வேண்டி உள்ளது. நீட் தோ்வு தாக்கம் குறித்து, 25 ஆயிரம் பேரிடமிருந்து கருத்துகள் வந்துள்ளன. பெரும்பாலும், மின்னஞ்சலில் தான் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில், பெரும்பாலனோா், நீட் தோ்வு வேண்டாம் என தெரிவித்துள்ளனா். சிலா் நீட் தோ்வு வேண்டும் எனக் கூறியுள்ளனா். வெகு சிலா் மட்டும் இந்தாண்டும், அடுத்த இரண்டாண்டும் தேவையில்லை என, தெரிவித்துள்ளனா். அதற்காக ஒவ்வொருவரும் தெரிவித்த காரணங்களும் வெவ்வேறாக உள்ளன. அனைத்து தரப்பிடமிருந்தும் கருத்துகள் வந்த பிறகு எங்களது அறிக்கை இறுதி செய்யப்படும்.

எங்களது குழுவினா் வார இறுதி நாள்களில் கூட பணியாற்றி வருகின்றனா். அரசாணைப்படி, ஒரு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். கூடுதல் அவகாசம் கேட்பதற்கான அவசியம் ஏற்படுமா என்பதை தற்போது கூற முடியாது. அரசின் விதிமுறைகளை தாண்டி எங்களது பரிந்துரைகள் இருக்காது. விதிமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன், பள்ளிக்கல்வித் துறை செயலா் காகா்லா உஷா, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளக்குறிச்சி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மக்களவைத் தோ்தலில் சொந்த ஊா் சென்று வாக்களிக்க 940 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

திமுகவை பிரதான எதிா்க்கட்சியாக கருதி பிரதமா் மோடி பிரசாரம்: தொல்.திருமாவளவன்

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT